search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மராத்தா போராட்டம்"

    மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா போராட்டம் நீடித்து வரும் நிலையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மேலும் 2 பேர் தற்கொலை செய்துள்ளனர். #MarathaReservationProtest
    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

    மராத்தா சமூகத்தினர் போராட்டத்தை கைவிடு மாறு மாநில முதல்-மந்திரி பட்னாவில் வேண்டுகோள் விடுத்து இருந்தார். நவம் பருக்குள் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று தெரிவித்து இருந்தார். அவரது வேண்டுகோளை நிராகரித்து மராத்தா சமூகத்தினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

    இடஒதுக்கீடு வழங்காததை கண்டித்து பா.ஜனதா எம்.பி. ஹீனா சராவித் காரை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள். துலே பகுதியில் திட்டக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

    அப்போது காரை கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே விட்டு இருந்தார். போராட்டக்காரர்கள் அவரது காரை தாக்கினார்கள். இது தொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மேலும் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பராபணி மற்றும் வாசிம் பகுதிகளில் இளைஞர்கள் தற்கொலை செய்தனர். #MarathaReservationProtest


    மராத்தா போராட்டத்திற்கு ஆதரவாக அந்த சமுதாயத்தை சேர்ந்த 3 பேர் உயிர் தியாகம் செய்த நிலையில் மேலும் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Maharashtra #MarathaQuota #Suicide
    மும்பை:

    மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வரும் மராத்தா சமுதாயத்தினரின் தீவிர போராட்டம் வன்முறை களமாக மாறியுள்ளது. மராத்தா சமுதாயத்தினரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் மாநில அரசு திணறிக்கொண்டு இருக்கிறது.

    இந்தநிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் அந்த சமுதாயத்தை சேர்ந்த 3 பேர் கோரிக்கைக்காக உயிர் தியாகம் செய்தனர். இந்தநிலையில், மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினைக்கு ஆதரவாக நாந்தெட்டை சேர்ந்த கச்ரு கல்யானே(வயது38) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    மேலும் பீட் மாவட்டம் கெத் தாலுகாவில் உள்ள வீடா கிராமத்தை சேர்ந்த அபிஜித் தேஷ்முக் (35) நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதன் மூலம் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.  #Maharashtra #MarathaQuota #Suicide
    ×